Tuesday, May 3, 2011

ஒசாமா பின் லேடனை கொன்றது அமெரிக்க படை:ஒபாமா

இஸ்லாமாபாத்/ வாஷிங்டன், மே.2,2011
அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவரும், செப்டம்பர் 11 தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்டவருமான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமாவை, தனது உளவுப்படையின் சி.ஐ.ஏ. துணையுடன் அமெரிக்கப் படை கொன்றது. பின் லேடன் கொல்லப்பட்டது தொடர்பான அறிவிப்பை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டார்.
பின்னர், பத்திரிகையாளர் தரப்பு பார்வையிட்ட பிறகு, ஒசாமாவின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒசாமா பின்லேடனுடன், அவருடைய மகன் உள்ப்ட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க படையினர் தனது உளவுப் படையின் துணையுடன் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில், ஒசாமா கொல்லப்பட்டார். அவரது உடலை அமெரிக்கப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
Read more »

No comments: