யெமன் தேசம் முகாவா எனும் பிரதேசத்தில் வாழும் பாதீப் எனும் பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர்களே அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் பின் உமர் பாதீப் அல் யமானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) ஆரம்ப கல்வியை தன் சொந்த ஊரில் பெற்றுக்கொண்ட பாதீப் மௌலானா அவர்கள் உயர்கல்விக்காக எகிப்து நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை மிக்க அல் அஸ்ஹர் சர்வகலாசாலைக்கு சென்றார்கள். தங்கள் பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றும் ஆவலோடு புனித மக்காவுக்கு சென்று ஹஜ்ஜை முடித்த பின் மதீனாவுக்கு சென்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ரவ்ளா ஷரீபை அடைந்து பெற்ற இன்பம் ஆன்மீக சுவை நிரம்பியதென அவர்கள் கூறுவார்கள்.
Read more »
No comments:
Post a Comment