Wednesday, June 16, 2010

இன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம் - கஹடோவிட Y.M.M.A. க்கு விசேட சான்றிதழ்


இன்று (ஜூன் 14) உலக இரத்த தானம் செய்வோர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனையொட்டி நேற்றைய தினம் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையால் நிட்டம்புவ நகரில் விசேட வைபவமொன்றும் இரத்ததான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
வத்துபிட்டிவல வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பல்வேறு வகையில் ஒத்துழைத்த பலரும் அமைப்புகளும் இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். எமது ஊரில் இயங்குகின்ற லு Y.M.M.A. கிளை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தமைக்கான சிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியர்கள் மதகுருமார்கள் நிட்டம்புவ நகர வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

1 comment:

Anonymous said...

now kahatowitya village like a e kahatowita all use internet but they don;t manner but every person must see this web site namely lot perzsom don'y