Wednesday, June 16, 2010

அல் பத்ரியாவில் கல்வி நிலை வீழ்ச்சி – சா.தர மாணவர்கள் மிக மோசமாகப் பாதிப்பு

 அல் பத்ரியாவின் கல்வி நிலை நாளுக்கு நாள் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதையிட்டு ஊர் மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். அண்மைக்காலமாக பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காத நிலையிலேயே அதிகமான வகுப்புகள் காணப்படுகின்றன. விசேடமாக இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பர்Pட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறை இருக்கின்ற சில ஆசிரியர்களின் அசமந்தப் போக்கு மற்றும் மாணவர்கள் சிலரின் ஒழுக்கவீனம் என்பன இந்த வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. தனது மகனின் சுகவீனம் காரணமாக பாடசாலை விடயங்களை முழுமையாகக் கவனிக்க முடியாத நிலைக்கு அதிபர் தள்ளப்பட்டுள்ளதால் இந்நிலை மேலும் மோசமடைந்தள்ளது.

பாடங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் பலரை சில பெற்றோர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசிய போதும் பலனில்லாத நிலையில் கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்ய சில பெற்றோர் தயாராகி வருகின்றனர்.

No comments: