இலங்கையில் நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் உட்பட கடந்த பல தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்துவருகின்ற நிலையில் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தான் விலகப்போவதில்லையென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிக்காது தவிர்த்துள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள புதிய சூழ்நிலையில் கட்சி தலைமைத்துவம் குறித்து சிந்திக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் அவநம்பிக்கையுமே தமது கட்சியின் தோல்விக்கு காரணம் என ரணில் தெரிவித்தார்.

தேர்தல் நடைமுறைகளில் மக்கள் அதிருப்தி
இதற்கிடையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதருப்தி போக்கே இந்த நிலைமைக்கு காரணம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![]() | ![]() |
ரணில் மற்றும் மகிந்த |
கடந்த தடவைகளுடன் ஒப்பிடும் விட பாரியளவிலான அசம்பாவிதங்களோ பிரச்சனைகளோ இன்றி இம்முறை தேர்தல் நிறைவு பெற்றிருப்பதாக பெப்பரல் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
![]() | ![]() |
மக்கள் ஆர்ப்பாட்டங்கள்-(ஆவணம்) |
இந்தியாவை போன்று மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேர்தல் மோசடிகளையும் அவை தொடர்பான சந்தேகங்களையும் தடுக்க முடியும் எனவும் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு சிபார்சு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment