Thursday, April 1, 2010

முஸ்லிம்கள் ஜனாதிபதியின் உற்ற நண்பர்கள் - பஸில் ராஜபக்ஷ கஹடோவிடவில் தெரிவிப்பு

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடகின்ற ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ அவர்கள் இன்றிரவு (2010.04.01) கஹடோவிடவுக்கு வருகை தந்தார். 
கஹடோவிட ஸ்ரீ.ல.சு.க. கிளையின் தலைவர் இக்ரமுல்லா அவர்களின் வீட்டு முன்றலில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில் தனிப்பட்ட முறையிலும் இராஜாங்க அடிப்படையிலும் ஜனாதிபதிக்கு அதிக உதவிகள் செய்தவர்கள் முஸ்லிம்களே எனக் குறிப்பிட்டார்.

பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தில் இணைந்திருந்ததையும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மேற்குலகம் யுத்த தளபாடங்களை வழங்க மறுத்த நிலையில் சக்தி வாய்ந்த யுத்த தளபாடங்களை எமக்குத் தந்துதவிய ஒரே நாடு பாகிஸ்தான் என்பதையும் ஈரான் லிபியா போன்ற நாடுகள் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் கைகொடுத்து உதவிய சந்தர்ப்பங்களையும் நினைவு படுத்திப் பேசினார்.
அத்தோடு போலிக் குற்றச்சாட்டொன்றின் பேரில் அன்றைய ஐ.தே.க. அரசு ஜனாதிபதியைக் கைது செய்வதற்காக முயன்ற போது பல மாதங்களாக பாதுகாப்பில் வைத்திருந்தவர் சட்டத்தரணியான முஸ்லிம் நண்பரே எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறான சிறந்த நட்புறவுடன் முஸ்லிம்களுடன் செயற்படுகின்ற ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் அமோக ஆதரவு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹா மாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க முன்வந்திருக்கின்ற தன்னிடம் முஸ்லி;ம்களது பிரச்ச்pனைகளை ஒப்படைக்குமாறும் அவற்றைத் தீர்த்து வைக்க தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்ததோடு இரவு 11.00 மணியைத் தாண்டிய நிலையிலும் பெருந்திரளாக வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் வேட்பாளர் சரண குணவர்த்தன மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Share

1 comment:

Anonymous said...

develop kahatowita village now