Thursday, October 20, 2011

கேணல் கடாபி கைது : லிபிய தேசிய இடைக்கால கவுன்ஸில் அறிவிப்பு


ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியாவை தற்போது நிர்வாகம் செய்யும் தேசிய இடைக்கால கவுன்ஸில்தெரிவித்துள்ளது.
கேணல் கடாபி 'பிடிக்கப்பட்டுள்ளதாகவும்' ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்பது உறுதியில்லை எனவும் லிபிய  தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகளின் களத் தளபதி ஒருவர் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளார்.




இதேவேளை பிடிபட்டுள்ளதாகவும் அவரின் இரு கால்களும் காயமடைந்துள்ளதாகவும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
கேணல் கடாபியின் சொந்த நகரான சேர்ட்டேவை கடும் மோதல்களின் பின்னர் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கடாபி சேர்ட்டே நகரில் வைத்து இடைக்கால கவுன்ஸில் படைகளிடம் பிடிபட்டுள்தாகவும் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



எனினும் இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என நேட்டோ தெரிவித்துள்ளது.


No comments: