கடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் எல்லா வகையான வேற்றுமைகளையும் களைந்து உலக சமுதாயங்களின் கலாசாரக் கொள்கை சார்ந்த தனித்துவங்களைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. உலகமே இன்று ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாறியுள்ளது. ஒருவர் தான் விரும்பியதை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இன்று தணிக்கை என்பதற்கே இடமில்லாமல் போய்விட்டது.
No comments:
Post a Comment