Thursday, December 30, 2010

ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள்

10 அணிகள் பங்கேற்கும் 4வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி வீரர்களுக்கான ஏலம் வருகிற 8 மற்றும் 9ம் திகதி பெங்களூரில் நடைபெறுகிறது.

டெண்டுல்கர், டோனி, ஷெவாக் உட்பட 12 வீரர்களை தவிர மொத்தம் 350 இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யுள்ளார். 

அதிரடி வீரர் யூசுப் பதான், ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருது பெற்ற டிவில்லியர்ஸ், கங்குலி, கும்ப்ளே, டிராவிட், கம்பீர், ஜாகீர்கான் ஆகியோரும் ஏலப்பட்டியலில் இருக்கிறார்கள்.

No comments: