இல. 369 கஹடோவிட கிராம சேவகர் பிரிவுக்கு கிராம சேவை அலுவலராக ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக சிங்கள மொழியில் மாத்திரம் சேவையாற்றுகின்ற கிராம சேவை அலுவலர்களே கடமையாற்றியதால் தமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஊர் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அதற்கு தீர்வாக தமிழ் மொழி மூல அலுவலர் நியமிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிங்கள மொழியில் பரிச்சயமில்லாதிருந்ததால் உரிய பயன் மக்களுக்குகக் கடைக்காத நிலையே காணப்பட்டது. ஏற்கனவே கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த ஜனாப் அப்துல் ரவூப் அவர்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்ட வரப்பட்டதால் மன்னாருக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜனாப் M.H.M. ஜவுபர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதாலும் ஊரைச் சேர்ந்தவராக இருப்பதாலும் மக்களது தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இவர் எற்கனவே பல ஆண்டுகளாக இப்பிரிவில் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இவர் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதாலும் ஊரைச் சேர்ந்தவராக இருப்பதாலும் மக்களது தேவைகளை இலகுவில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
இவர் எற்கனவே பல ஆண்டுகளாக இப்பிரிவில் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment