Saturday, June 5, 2010

கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் உதயம்

கடந்த சில மாதங்களாக பல சுற்றுக்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முஹியித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆ மஸ்ஜித் மஸ்ஜித் ஜாமிஃ ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளிலிருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது தற்காலிக நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரில் சில காலங்களாக நிலவி வரும் சமூக சீர்கேடுகள் மற்றும் ஒழுக்க வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
 
இந்த அமைப்பின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகளை அடைய  ஊர்மக்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமாகும்.
 
எனவே இந்த அமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து தோள் கொடுப்போம்.



No comments: