கமிட்டியின் தலைவராக அல் ஹாஜ் ஜிப்ரி அவர்களும், செயலளராக ஜனாப் ஸில்மி அவர்களும், பொருளாளராக அல் ஹாஜ் பயாஸ் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இந்த தெரிவுகளின் போது, பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் அனைவரும் மிகவும் விட்டுக் கொடுப்புகளுடன் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்ட விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும். இந்தப் புரிந்துணர்வு, எதிர்காலக் கஹட்டோவிட்டாவின் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இருந்தது.
எவ்வாறாயினும், இந்தக் கமிட்டியின் மீதுள்ள பொறுப்பு பாரியது; அவர்களால் மாத்திரம் நிறைவேற்றப்பட முடியாதது. ஊர் மக்களாகிய எம் அனைவரினதும் ஒத்துழைப்பின் தன்மையிலேயே இதன் வெற்றி தங்கியிருக்கிறது. எனவே, இடம்பெற்றுள்ள நியமனத்தை 'பளிச்!' பாராட்டுகின்ற அதே வேளை, தங்களாலான பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஊர் மக்கள் அனைவரையும் ஊரின் சிறந்த எதிர்காலம் கருதிக் கேட்டுக் கொள்கிறது.
Share

No comments:
Post a Comment