Monday, May 31, 2010

ஸலவாத் ஓதாதவன் நரகத்தில் நுழைவான்

  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மிமபரில் ஏறினார்கள் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று 3 விடுத்தம் கூறினார்கள்..........

அப்போது யா ரஸுலல்லாஹ்! மிம்பரில் ஏறும் போது எதற்காக 3 முறை ஆமீன் சொன்னீர்கள் என்று சாஹாபாப் பெரு மக்கள் விளக்கம் கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிளவித்தார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இப்போது வந்து எவரிடமாவது ரமழான் மாதம் வந்து அதில் அவருடைய பாவம் மன்னிக்கப்படாதவர் நராத்தில் நுழைவாராக மேலும் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவரை அல்லாஹ் அகற்நறுவானாக என்று துஆ செய்து விட்டு என்னை ஆமீன் என்று கூறும் படி பணித்தார்கள்.. நானும் ஆமீன் என்று கூறினேன் மீண்டும் இரண்டாவது படியில் ஏறும் போது எவராவது அவருடைய வயது முதிர்ந்த பெற்றோர் இருவரும் அல்லது ஒருவர் அவருடன் வாழ்ந்தனர் இவர் அவர்களுக்கு உபகாரம் செய்யவில்லையெனில் இந்த நபர் நரகத்தில் நுழைவாராக அல்லாஹ்வின் அருளை விட்டும் அவரை அல்லாஹ் அகற்நுவானாக என்று துஆ செய்து விட்டு என்னை ஆமீன் என்று கூறும் படி பணித்தார்கள்.. நானும் ஆமீன் என்று கூறினேன் மூன்றாவது படியில் ஏறும் போது (நபியாகிய ) உங்களைப் பற்றி எவரிடமாவது சொல்லப்பட்டு அவர் உங்கள் மீது ஸலவாத் ஓதவில்லை எனில் அவர் நரகத்திற்குச் செல்வாராக அல்லாஹ்வின் அருளை விட்டும் அவரை அல்லாஹ் அகற்நறுவானாக என்று துஆ செய்து விட்டு என்னை ஆமீன் என்று கூறும் படி பணித்தார்கள்.. நானும் ஆமீன் என்று

(இப்னுஹிப்பான்)


No comments: