அமெரிக்க அதிபர் ஒபாமாவால் அழைப்பு விடுக்கப்பட்ட அணுப் பாதுகாப்பு மாநாட்டுக்காக நாற்பதுக்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.

இந்த மாதிரியான மாநாடுகளை எடுத்துக்கொண்டால், 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன் கண்ட மிகப் பெரிய மாநாடு இதுவாகும்.
அணுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுப்பதற்கான அதிபர் ஒபாமாவின் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது.
அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படும் பொருட்களை பாதுகாப்பது குறித்த திட்டத்தில் ஒரு பரந்துபட்ட இணக்கப்பட்டை காண்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.
புளுட்டோனியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவை அரசு அல்லாதவர்களின் கரங்களில் சேர்வதைத் தடுப்பது இதில் அடங்கும்.

பாகிஸ்தான் மீது விசேட கவனம்
![]() | |
இரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க மேற்குலகம் முயன்றுவருகிறது |
இந்த மூன்று நாடுகளும் அணுபரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்பதுடன், அவை அணு ஆயுதங்களை தாயாரித்து வைத்திருப்பதாகவும் கருதப்படுகின்றது.
பாகிஸ்தானின் அணு ஆலைகள் மற்றும் அதனிடம் இருக்கும் அணுப்பொருட்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பற்றியும் கணிசமான கவலைகள் இருக்கின்றன.
இந்த நாடுகளை இம்மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம், அணு ஆயுத கட்டுப்பாட்டு வளையத்தை விரிவுபடுத்த அதிபர் ஒபாமா விளைகின்றார்.
அச்சுறுத்தல்
அணு ஆயுதங்களில் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு சுத்தீகரிக்கப்பட்ட யுரேனியம் உலகில் மொத்தமாக 1600 டன்கள் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த அளவு முழுக்கவுமே அணு ஆயுத வல்லமை பெற்ற நாடுகளுடைய அரசாங்கங்களின் பொறுப்பில்தான் உள்ளதாகத் தெரிகிறது. அதிலே பெரும்பங்கு ரஷ்யாவிடம்தான் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த யுரேனியத்துக்கும் மேலாய் அணு ஆயுத தயாரிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் இன்னொரு வஸ்தான புளூடோனியம் உலகில் மொத்தத்தில் 500 டன்கள் அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் வைத்து ஒரு லட்சத்து இருபதாயிரம் குண்டுகளை உருவாக்க முடியுமாம்.
இதைத் தாண்டி வேறொரு கவலையும் உள்ளது. அதிகம் சுத்தம் செய்யப்படாத அணுசக்தி வஸ்துக்களை கொண்டு ஆங்கிலத்தில் டர்டி பாம் என்று சொல்லப்படுகின்ற தரக்குறைவான அணுகுண்டுகளை உருவாக்க முடியுமாம்.
இந்த குண்டுகள் ஒரு முக்கிய நகரத்தை அழிக்காமல் போனாலும், அணுக் கழிவுகளால் ஊரை மோசமாக மாசு படுத்தக்கூடிய ஆபத்தை அவை ஏற்படுத்திவிடும்.
No comments:
Post a Comment