Friday, April 23, 2010

கஹட்டோவிட இளைஞர்களிடையே பரவி வரும் காதல் நோய்…


இன்றையஇளைஞர்களை ஆட்கொள்ளும் பயங்கர நோய்களில் காதல் நோயும் ஒன்றாகும். இந்நோய்நமதூர் இளைஞர்களிடமும் மிக வேகமாக பரவி வருவது மிகவும் கவலைக்கிடமான ஒருவிடயமாகும்.
பல்வேறு மார்க்க நிறுவனங்களும் பள்ளிவாசல்களும் காணப்படும் ஒரு ஆண்மிகசூழல் உள்ள எமதூரில் இவ்வாறான மோசமான நோய் தொற்றிய இளைஞர்கள் அதிகரித்துவருவது ஊரின் எதிர்காலத்தில் ஆரோக்கியமான இளைஞர்;கள் உருவாவதைக்கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஊரில் உள்ள இளைஞர்களில் 90% இளைஞர்கள் இக்காதல் நோயில் வீழ்ந்துள்ளதாக அண்மைக்காலத்தில்எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது. இதற்கான காரணங்களைக்கண்டறிந்து அதற்குறிய தகுந்த சிகிச்சையை வழங்காவிட்டால் இன்னும் மோசமானவிளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.

இளைஞர்களை சரியான பாதையில் வழி நடாத்துவது பெற்றேர்கள், அவர்களுக்குகல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பள்ளிவாசல்கள், மார்க்கநிறுவனங்கள் போன்ற அனைத்துத் தரப்பினதும் கடமையும் தட்டிக் கழிக்க முடியாதபொறுப்புமாகும்.

எனவே இதுவிடயத்தில் சிறந்த ஒருமுடிவை அனைத்துத் தரப்பும் எடுத்து எமது ஊரையும் இளைஞர்களையும் சரியானபாதையில் நடாத்தக் கூடிய வழிவகைகளை இத்தளத்தினூடாக கருத்துப்பரிமாற்றம்செய்யலாம் என நினைக்கின்றேன். எனவே உங்களது கருத்துக்களையும்ஆலோசனைகளையும் இதனூடாகப் பரிமாரிக் கொள்ளவும்.

2 comments:

Anonymous said...

u right

Anonymous said...

ponna pudiyanuhal evanuhala yarum thirathuuzalla ellarum summava erukkuranuhal paytthiyakaranuhal