Sunday, April 11, 2010

கண்டி, திருமலை மாவட்டங்களிலுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு 20ம் திகதி மீண்டும் வாக்குப் பதிவு

கண்டி மற்றும் திருமலை மாவட்டங்களி லுள்ள 35 வாக்களிப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் 20ம் திகதி மீள்வாக்குப் பதிவு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள 34 வாக்களிப்பு நிலையங்களுக்கும் திருமலை மாவட்ட த்திலுள்ள கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திற்குமே மீண்டும் வாக்குப் பதிவு நடாத்தப்படவிருக்கிறது.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு மோசடி இடம்பெற்றது உறுதிப் படுத்தப்பட்டதையடுத்து அவ்வாக்களிப்பு நிலையங்களின் வாக்களிப்பை தேர்தல் ஆணையாளர் ரத்துச் செய்ததுடன் அவற்று க்கு மீண்டும் வாக்குப் பதிவு நடாத்துவதற்கு முடிவு செய்திருந்தார்.

மேற்படி 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரையும் இவ்விரு மாவட்டங்களுக்குமான இறுதி முடிவு அறிவிக்கப்பட மாட்டாதென தேர்த ல்கள் ஆணையாளர் அறிவித்தார்.




No comments: