பாரளுமன்றப் பொதுத் தேர்hதல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் என்றுமில்லாதவாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்ட்சியின் செல்வாக்கு ஊரில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. நேற்றிரவு ஊருக்கு வருகை தந்த அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான லசந்த அளகியவன்ன அவர்களை வரவேற்க பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர்.
பாரம்பரியமாக சுதந்திரக்கட்சியை ஆதரித்து வந்தவதவர்களுடன் புதிய குழுக்களும் இணைந்து கொண்டுள்ளமையும் ஆர்ப்பரிக்காமல் அரசியலில் ஈடுபடுகின்ற சிலர் பகிரங்கமாக சுதந்திரக்கட்சியை ஆதரிக்க முன்வந்துள்ளமையும் ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சியிலும் முஸ்லிம் காங்கிரஸிலும் இருந்த சிலர் இரகசியமாக ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கின்றமையும் இவ்வாறு ஆளும் கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் இத்தேர்தல் பற்றி இதுவரை ஊரில் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதோடு மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment