Saturday, February 27, 2010

கஹடோவிட பாலத்துக்கருகாமையில் கைக்குண்டு கண்டுபிடிப்பு


அத்தனகல்ல ஓயா ஆற்றுக்குக் குறுக்காக அமைந்தள்ள கஹடோவிட பாலத்துக்கு அருகாமையில் கடந்த திங்கட்கிழமை கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பொறுக்கிய பந்து போன்ற ஒரு பொருளை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையாட முற்பட்டிருக்கின்றனர். வித்தியாசமாக இருக்கின்ற இப்பொருளைக்கண்ட சிறுவனின் பெற்றோர் உடனடியாக தூர எறிந்து விட்டு பொலிசாருக்கு அறிவித்தள்ளனர்.

ஸ்தலத்துக்கு வந்த பொலிசார் குறிப்பிட்ட பொருள் கைக்குண்டு என்பதை உறுதிப்படுத்தியதோடு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.








No comments: