Monday, February 8, 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கஹடோவிடவுக்கு வருகை



அல் ஹாஜ் M.U.M. ருஸ்தி அவர்களதும் மேலும் பல சிரேஷ்ட ஸ்ரீ .ல.சு.க. அங்கத்தவர்களினதும் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 2010.01.23 ஆம் திகதி கஹடோவிடவுக்கு வருகை தந்தார். ஆவரை வரவேற்பதற்காக ருஸ்தி ஹாஜியார் வீட்டில் சிறு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு வரவேற்புரை நிகழ்த்திய ருஸ்தி ஹாஜியார் இந்த சந்தர்ப்பத்தில் தம்முடைய அழைப்பை எற்று வருகை தந்த திருமதி சந்திரிகா அவர்களையும் வந்திருந்தவர்களையும் வரவேற்றார். அதன்பின்னர் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கஹட்டோவிட தனக்கு எப்போதும் மிகப்பரிச்சயமுள்ள இடம் எனவும் தான் சிறு வயது முதலே இங்கு அடிக்கடி வந்து போவதாகவும் தன்னுடைய அரசாங்க காலத்தில் பல சேவைகளை இக்கிராமத்துக்கு வழங்க முடிந்ததாகவும் பலருக்க தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததாகவும் குறிப்பிட்டார். அத்தோடு தான் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது கட்சியின் தலைமை தன்னைப் புறக்கணித்ததாகவும்இ இருந்த போதிலும் தான் கட்சியை விட்டு செல்லவோ பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடவோ முடிவு செய்யவில்லை என்றும் கூறினார். ஏதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீ .ல.சு.கட்சியை மறு சீரமைத்து உண்மையான  தொண்டர்களிடம் கட்சியைக் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே; இத்தேர்தலில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டாh.

அதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளை கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர் அஷ்ரப் ஹஸன் தொகுத்து வழங்கினார்.

பின்னர் ஜௌஸி ஹஜியார் நன்றியுரை நிகழ்த்தினார். இறுதியாக முன்னால் ஜனாதிபதிக்கு ருஸ்தி ஹாஜியார் வீட்டில் தேனீர் விருந்தொன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

No comments: